neer uyirthelundheerae நீர் உயிர்த்தெழுந்தீரே
உம் சிலுவை காட்சியை பார்க்கையிலே
உம் அன்பை அறிகிறேன்
உம் கரத்தின் கிரியைகளை பார்க்கையிலே
உம் வல்லமையை உணர்கிறேன்
நீர் உயிர்த்தெழுந்தீரே மரணத்தை ஜெயித்தெழுந்தீரே
கட்டுகளை உடைத்தெழுந்தீரே இயேசுவே .. (2)
1. உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன்
நீர் என்னோடு இருப்பதால்
நான் எல்லாமே செய்கிறேன்
– நீர் உயிர்த்தெழுந்தீரே
2. உம்மாலே நான் எரிகோவையும் தகர்த்திடுவேன்
உம்மாலே நான் யோர்தானையும் கிழித்திடுவேன்
நீர் என்னோடு இருப்பதால்
நான் எல்லாமே செய்கிறேன்
– நீர் உயிர்த்தெழுந்தீரே
3. உம்மாலே நான் பாவ இச்சையை மேற்கொள்ளுவேன்
உம்மாலே நான் இந்த உலகத்தை ஜெயித்திடுவேன்
நீர் என்னோடு இருப்பதால்
நான் எல்லாமே செய்கிறேன்
– நீர் உயிர்த்தெழுந்தீரே