thanneerai kadakkum pothum தண்ணீரை கடக்கும் போதும்
தண்ணீரை கடக்கும் போதும்
என்னோடு இருப்பவரே
வெள்ளங்கள் புரளாமல்
என்னை என்றும் காப்பவரே-2
அக்கினியில் நடந்தாலும்
சோதனைகள் சூழ்ந்தாலும்
தப்புவித்து காப்பவரே-என்னை
அன்பால் அணைப்பவரே-2
1.எரிகோவின் மதில்களெல்லாம்
உடைத்தவரே-எங்கள்
வாழ்விலும் எதிர்த்து நிற்கும்
தடைகளை உடைப்பீரே-2
கானானை சொந்தமாய்
தேவ ஜனம் பெற்றனரே
பரலோக கானானை
எங்களுக்கும் தருவீரே-2-தண்ணீரை
2.பார்வோனின் சேனை எல்லாம்
தொடர்ந்த போதும்-பெரும்
செங்கடலை பிளந்து
உம் ஜனத்தை நடத்தினீரே-2
பகலிலே மேகஸ்தம்பம்
இரவிலே அக்கினிஸ்தம்பம்
அற்புதமாய் நடத்தினதே
எங்களையும் நடத்துவீரே-2-தண்ணீரை