koodaaravaasiyae nithiyar irukukaiyil கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்
கூடாரவாசியே நித்தியர் இருக்கையில்
நீ ஏன் கலங்குகிறாய்
கடந்திடும் காலம் கலைந்திடும் வேஷம்
நீ ஏன் பதறுகிறாய் -2
நீ மேலானவைகளைத் தேடு
நித்தியர் இயேசுவை நாடு – 2
நீ வாழும் வாழ்க்கை மணல் வீடுதானே
புயல் வந்தால் சரிந்திடுமே -2
நிலையான நகரம் நமக்கிங்கு இல்லை
நித்திய வாழ்வில் தானே -2
செல்வம் சுகமோடும் பேர் புகழோடும்
சுகித்து நீ வாழ்கிறாயோ -2
சந்தேகம் இல்லை மரணம் ஒருநாள்
உன்னையும் சந்திக்குமே -2