kanmalaiyaagiya thagappan neerae கன்மலையாகிய தகப்பன் நீரே
கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE
கன்மலையாகிய தகப்பன் நீரே
ஒருநாளும் மெளனமாய் இருப்பதில்லை-2
உம் பரிசுத்த சந்நிதிக்கு நேராக கையெடுப்பேன்
வாஞ்சைகள் நிறைவேற்றினீர்-2
(என்) தகப்பன் வீட்டில் நன்மை உண்டு-4
1.ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை
என்று என் வாழ்வில் சொன்ன தேவனே-2
உம் தயவினால் என் பர்வதத்தை
திடமாக நிற்கப்பண்ணினீர்-2-உம் பரிசுத்த
2.கிருபையில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்
என் பாதைகள் பெரிதாக்கினீர்-2
உம் வார்த்தையின் மகா வல்லமையால்
என் காலங்களை ஆசீர்வதித்தீர்-2-உம் பரிசுத்த