kandangi selai katti christmas கண்டாங்கி சேலை கட்டி
கண்டாங்கி சேலை கட்டி
மரிக்கொழுந்து தலையில் சூடி
கஞ்சி பானை சுமந்து போகும்
சின்ன பொன்னே கொஞ்சோ நில்லு
தன்னானே தான நன்னே தன்னனனே தானே நானே
குளம் எல்லாம் நறைஞ்சிருக்கு
வயலெல்லாம் வெளைஞ்சிருக்கு
கைல காசு இருக்கு
கவலை இனி நமக்கு எதுக்கு
மதியீனமாய் பேசாதைய
மனதில் கர்வம் கொள்வதையே
இன்று இரவு ஜீவன் போனால்
சேர்த்த செல்வம் யாருக்கு போகும்
உனக்காக மேன்மை இழந்தார்
எனக்காக மகிமை இழந்தார்
நமக்காக தன்னை இழந்த
தேவ பாலன் பிறந்தார் ஐயா
ஆலயம் தொழுவோம் நாமும்
தேவனையே பணிவோம் நாளும்
பெத்தேலகம் பாலகனை
நம் இல்லம் அழைத்து போவோம்