oru naal iravil en yesu ennodu ஒரு நாள் இரவில் என் இயேசு
ஒரு நாள் இரவில்
என் இயேசு என்னோடு பேசினார்
பல நாள் இரவில்
என் தேவன் என்னோடு பேசினார்
ஆராதனை வேளையில்
என் இயேசு என்னோடு பேசினார்
ஆராதனை வேளையில்
என் தேவன் என்னோடு பேசினார்
நான் நம்பிய மனிதர் என்னை கைவிட்டு
தம் கை தட்டி சிரிக்கும் வேளை
கலங்காதே திகையாதே
உன்னை ஒருபோதும் மறவேன் என்றார்
மனம் கசந்து கசந்து அழும் வேளையில்
மனம் துவண்டு துவண்டு நின்றேன்
கலங்காதே திகையாதே
உன்னை ஒருபோதும் மறவேன் என்றார்