en aathumavin deebamae என்னாத்துமாவின் தீபமே
1. என்னாத்துமாவின் தீபமே
என்னருமை இரட்சகனே
நீ ரென் சமீபமிருந்தால்
இருள் பகலாய் மாறுமே
2. கண் மயங்கி நான் நித்திரையில்
களைப்புற்றுக் கிடக்கையில்
உன் மடியிலென் இரட்சகா
ஒதுக்கி வைத்துக் காரையா
3. காலை முதல் மாலை வரை
கர்த்தாவே நீரென்னோடிரும்
உம்மையல்லாம் ஓர் பொழுதும்
உயிர் விடத் துணிவேனே