enna thavam seidhen naan என்ன தவம் செய்தேன் நான்
என்ன தவம் செய்தேன் நான்
என் மேலே எத்தனை அன்பு
ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கி
ஊழியத்தில் பயன்படுத்துகின்றீர்-2
1.மனுஷனின் பேச்சுக்கும்
பொறாமையின் சொல்லுக்கும்
விலக்கி பாதுகாத்தீரே-2
அவமான சொற்களை
அடையாளம் இல்லாமல்
என்னை விட்டு போக செய்தீரே-2
இயேசுவே என்னை உயர்த்தி வைத்த
தெய்வம் நீரே-2-என்ன தவம்
2.உயிர் உள்ள வரை நான்
உண்மையாய் இருப்பேன்
என் நோக்கம் எல்லாம் நீரே-2
என் இலட்சிய பாதையில்
விருப்பம் எல்லாமே
நீங்க தான் என் இயேசப்பா-2
இயேசுவே என்னை உயர்த்தி வைத்த
தெய்வம் நீரே-2-என்ன தவம்