unga kirubai naalae உங்க கிருபையினாலே
உங்க கிருபையினாலே
உயிர்வாழ்கிறேன்
உங்க இரக்கத்தாலே
நிலை நிற்கிறேன்-2
நன்மைகள் எதிர்பாராமல்
உதவிட்ட என் நேசரே-2
கோடி நன்றி ஐயா-2
நீர் செய்திட்ட நன்மைகளுக்காய்-2
1.கலங்கி நின்ற கண்ணீர் விட்டு
கதறி நான் அழுகையில்
கூக்குரல் கேட்டு எனக்கு பதில் தந்தீரே-2
பெலனற்று இருந்த என்னை
பெலவானாய் மாற்றியே
மகிழ்வித்து நடத்தினீரே-2-கோடி நன்றி
2.யாருமின்றி தனிமையில் நான்
தவித்திட்ட நேரத்தில்
தாங்கியே தப்புவித்து நடத்தினீரே-2
உதவுவார் யாருமின்றி
ஒதுக்கப்பட்டு இருந்த என்னை
உன்னதத்தில் நிறுத்தினிரே-2-கோடி நன்றி