yesu enakkaai piranthaarae இயேசு எனக்காய் பிறந்தாரே
இயேசு எனக்காய் பிறந்தாரே
பாடிக் கொண்டாடிடுவேன்
என் இறைவன் எனக்காய் ஜெனித்தாரே
பாடி மகிழ்ந்திடுவேன்
அவர் அதிசயமானவரே
அவர் ஆலோசனைக் கர்த்தரே
வல்ல தேவன் நித்யப்பிதா சமாதானப் பிரபு
மண்ணில் பிறந்தாரே
பிறந்தாரே உலகினிலே அடிமையின் ரூபம் கொண்டார்
துறந்தாரே தன் மகிமைதனை குடிலினில் வந்துதித்தார்
விண்தூதர் சூழ்ந்து பாடிடவே வான சாஸ்திரிகள் வந்து பணிந்தனரே
விண்ணை விட்டு மண்ணில் பிறந்தார்
இழந்த என்னை மீட்டிடவே இகமதில் இணைந்தாரே
தொலைந்த என்னை சேர்த்திடவே தொழுவத்தில் தோன்றினாரே
என் பாவம் யாவும் நீக்கிடவே இப்பாரினில் அவர் பிறந்தாரே
எனக்காய் பிறந்தாரே