intha ulagirkku oliyaga ennai இந்த உலகிற்கு ஓளியாக என்னை
இந்த உலகிற்கு ஓளியாக என்னை
அழைத்தாரே அழைத்தாரே
இந்த உலகிற்கு உப்பாக என்னை (என்னை)
மாற்றினாரே மாற்றினாரே
மலை மேல் உள்ள பட்டணம்
நான் மறைந்து இருப்பதில்லையே
நான் மலை மேல் உள்ள பட்டணம்
நான் மறைந்து இருப்பதில்லையே
1) கர்த்தர் கரத்தில் அலங்காரமான
கீரிடம் நான் கீரிடம் நான்
கர்த்தர் கரத்தில் உபயோகமான
பாத்திரம் நான் பாத்திரம் நான்
கர்த்தருக்காய் பயன்படுவேன்- நான்
கர்த்தருக்காய் செயல்படுவேன்
2) என் கால்களை கன்மலை மேல்
நிறுத்தினீர் நிறுத்தினீர்
கன்மலைமேல் மோதுபவனோ
நசுக்கப்படுவான் நசுங்கிப்போவான்
கர்த்தரே என் கன்மலையே
கர்த்தரே என் கோட்டையே
3) இந்த ஜனத்திற்கு எதிராக என்னை
வெண்கலமாய் நிறுத்தினீர்
உதிக்கின்ற என் ஒளியிடம்
ஜனங்கள் ஓடி வருவார்கள்
அழைத்தவர் உண்மையுள்ளவர்
அவர் என்றென்றும் மாறாதவர்