ithuvarai nee ilanthathellam இதுவரை நீ இழந்ததெல்லாம்
இதுவரை நீ இழந்ததெல்லாம்
நூறத்தனையாய் திருப்பிகொள்வாய்
முந்தினதை நீ யோசிக்க வேண்டாம்
பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்
இறைவன் இயேசு உண்டே
கலங்கிட வேண்டாம்
துன்பம் ஓன்று வரும் போது
உன் சாபம் என்று நினைப்பதென்ன
உனக்காக சிலுவையிலே
உன் சாபம் எல்லாம் ஒழித்திட்டாரே
துன்பம் கண்டு துயரடையாதே
இறைவன் இயேசு உண்டே
தோல்வி ஓன்று வரும் போது
உன் பாவம் என்று நினைப்பதென்ன
உனக்காக சிலுவையிலே
உன் பாவம் எல்லாம் ஒழித்திட்டாரே
தோல்வி கண்டு துவண்டுபோகாதே
இறைவன் இயேசு உண்டே
பயந்திடும் நிலை வரும் போது
எதிரி பெலத்தை நினைப்பதென்ன
துரைத்தனங்கள் அதிகாரங்கள்
உரிந்துகொண்டு வெற்றி சிறந்தார்
சூழ்நிலை கண்டு பயந்து போகாதே
இறைவன் இயேசு உண்டே