alai alaiyaai paainthu vaarum deva kirubai அலையலையாய் பாய்ந்து வாரும் தேவகிருபை
அலையலையாய் பாய்ந்து வாரும் தேவகிருபை
என்னை நனைத்ததையா
தேவனே உம் கிருபை
என்றென்றும் மாறாதது (2)
1. மலைகள் விலகினாலும்
மாசற்ற கிருபை பெருகுமே
மன்னவனை மகிழ்வித்தால்
மழையாக கிருபை ஊற்றுமே – பெரு
2.அதிகாலை தேவசமூகமே
ஆச்சரிய கிருபை பெருகுமே
ஆராதனை தூபத்தில்
அப்பாவின் ஜீவன் கிடைக்குமே – இயேசு
3.பலவீனத்தில் உம் கிருபை
பெலனாய் பாயுதையா
பலகோடி மனிதர்களின்
வாழ்வு மாறும் கிருபை வேண்டுமே இன்று