aathumame en muzhu ullame ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்
ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழு தேத்து – இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழு தேத்து
தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன்தோன்றி ஒழியாத
போற்றிடும் வானோர் பூதலத்துள்ளார்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள
தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும் ,மேலான
வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த
ஓதரும் தயை செய் துயிர் தந்த
உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்
முற்றும் கிருபையினால் முடி சூட்டும்
துதி மிகுந்தேறத் தோத்திரி தினமே
இதயமே, உள்ளமே, என் மனமே