aaviyea arulumea swami ஆவியை அருளுமே சுவாமீ எனக்
ஆவியை அருளுமே சுவாமீ எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே
நற்கனி தேடிவருங் காலனகள் ளல்லவோ
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ
பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்
பாம சந்தோஷம் நீடிய சாந்தம்
தேவ சமாதானம் நற்குணம் தயவு
திட விசுவாசம் சிறிதெனுமில்லை
தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்
திரி யவியாமலே தீண்டியே யேற்றும்
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும்