enna pakiyam என்ன பாக்கியம் எவர்க்குண்டு
என்ன பாக்கியம் எவர்க்குண்டு
இந்தச் சிலாக்கியம்
விண்ணவரும் புவிமேவும் முனிவர்களும்
மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன்
வானகந் தானோ அல்லதிது வையகந் தானோ
ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது
போதும் இவ்வாழ்வு பரகதி போவேன் இப்போது
ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது
எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது
சாமியைக் கண்டேன் மகானந்தம் சாலவுங்கொண்டேன்
காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்
கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும்
அன்னமும் நீயே கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே
மின்னுறு மேகத் திருக்கை துறந்தையோ
மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ