arivar araroe kanmani ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே
ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே (2)
பூபோல மேனி பொன் போல மின்ன
மாமன்னன் தூங்கட்டுமே (2)
1. உன்னையும் என்னையும் உருவாக்கியே
உலகாளும் இராஜா இவர்
சின்னக் குடிலில் கண் தூங்குகிறார்
என்ன இது விந்தையே (2)
– ஆரிவர்
2. வானதூதர் சொல் கேட்டு மேய்ப்பர்களும்
வந்தார் விரைந்தேகியே
உன்னத பாலன் புகழ் பாடியே
சென்றார் மகிழ்ந்தாடியே (2)
– ஆரிவர்