arunum kottaium belanai kaappavar அரணும் கோட்டையும்
அரணும் கோட்டையும்
பெலனாய் காப்பவர்
திடமாய் ஜெயித்திட
எனது என்றென்றும் துணையே
1. ஜீவ நம்பிக்கை நல்க
இயேசு மரித்து எழுந்தார் (2)
அழிந்திடாத உரிமை பெறவே
புது ஜீவன் அடையச் செய்தார் (2)
2. மகிழ்ச்சி ஆனந்தம் தங்க
மகிமை நம்பிக்கை ஈந்தார் (2)
நீதிமானை செழிக்கச் செய்து
என்றென்றும் ஜெயம் நல்குவார் (2)
3. தம்மால் மதிலைத் தாண்டி
உம்மால் சேனைக்குள் பாய்வேன் (2)
எதிர்த்து நின்று ஜெயமே அடைவேன்
என்றென்றும் துணைசெய்கின்றார் (2)