belanilla nerathil pudhu belan பெலனில்லா நேரத்தில் புது பெலன்
பெலனில்லா நேரத்தில் புது பெலன்
தந்து என்னை நீர் தாங்கிடுமே
திடனில்லா நேரத்தில் திடமனம்
தந்து என்னை நீர் நடத்திடுமே
பெலன் தாருமே பெலன் தாருமே
உம் பெலத்தால் என்னை நடத்திடுமே
எலியாவைப்போல் வனாந்திரத்தில்
களைத்து போய் நிற்கின்றேனே
மன்னாவை தந்து மறுபடி நடக்க செய்யும்
மனிதர்களின் நிந்தனையால்
மனம் நொந்து நிற்கின்றேனே – மன்னித்து
மறக்க உந்தனின் பெலன் தாருமே
போராட்டங்கள் சூழ்ந்ததாலே
சோர்ந்து போய் நிற்கின்றேனே
சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே
மாம்சம் என்னில் மேற்கொள்வதால்
அடிக்கடி தவறுகிறேன் – பரிசுத்த
வாழ்வு வாழ பெலன் தாருமே