en idhayam yaarukku என் இதயம் யாருக்குத் தெரியும்
என் இதயம் யாருக்குத் தெரியும்
என் வேதனை யாருக்குப் புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னைத் தேற்றுவார்
சிறகு ஒடிந்த பறவை
அது வானில் பறக்குமோ – உடைந்த
உள்ளமும் ஒன்று சேருமோ
மங்கி எரியும் விளக்கு
பெருங்காற்றில் நிலைக்குமோ
வீசும் புயலிலே படகும் தப்புமோ
அங்கே தெரியும் வெளிச்சம்
அது கலங்கரை தீபமோ – இயேசு
ராஜனின் முகத்தின் வெளிச்சம்
என் இதயம் யாருக்குத் தெரியும்
என் வேதனை யாருக்குப் புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
இயேசென்னை தேற்றுவார்