en siththamalla um siththam naathaa என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
என்னாலேயல்ல உம்மாலே ஆகும் நாதா
அடிமை நானே எஜமான் நீரே நாதா
பெலவீனன் நானே பெலவான் நீரே நாதா
காலையில் தோன்றி மாலையில் மறைபவன் நாதா
மலர்போல் பூத்து நிழல் போல் மறைவான நாதா
களிமண் நானே குயவன் நீரே நாதா
மண்ணான மனிதன் நான்
மண்ணுக்கே திரும்புவேன் நாதா
பாதகன் என்மேல் பாசம் கொண்டீரே நாதா
பாரெல்லாம் உம் புகழ் பாடி மகிழ்வேன் நாதா
உம் திரு இரத்ததால் மீட்டுகொண்டீரே நாதா
உம் செல்ல பிள்ளையாய் சொந்தாமானேன் நாதா