kaarirul vaelaiyil katunkulir naeraththil காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலம தாய்
பாரினில் வந்த மன்னவனே உம்
மாதயவே தயவு
1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிட னானது
மாதயவே தயவு
– காரிருள்
2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவே தயவு
– காரிருள்
3. விந்தை விதந்தனில் வந்தவனே,
வானவனே, நாங்கள்
தந்தையின் அன்பைக் கண்டதும் உந்தன்
மாதயவே தயவு
– காரிருள்