nanriyaal paatituvoem நன்றியால் பாடிடுவோம்
நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா நன்மைகளை நினைத்தே
1. செங்கடல்தனை நடுவாய் பிரித்த எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும் தயவாய் மாதயவாய் – நன்றி
2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய மாபெரும் கிருபை
மாநிலத்தோர்க் கீந்தார் இயேசு சுவிசேஷ ஒளியாய் – நன்றி
3. உயிர்ப்பித்து உயர்த்தினார் உன்னதம் வரை – உடன் சுதந்தரராய் இருக்க
கிருபையின் ஈவாய் வரும் காலங்கள் விளங்க ஒளி விளங்க – நன்றி
4. சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு ராஜனாய் – சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே இயேசுவின் முகமே – நன்றி