sollarum meygngnaanarae maenmaiprapuvae சொல்லரும் மெய்ஞ்ஞானரே மேன்மைப்ரபுவே
சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே, – உரை.
வல்லறஞ் சிறந்து மனுவானாரே, – உயர்
இல்லறந் துறந்து குடிலானாரே, – உரை ………. சொல்
1.மாடாயர் தேடும் வஸ்துபகாரி, – மிகு
கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,
வையகம் புரப்பதற்கு வந்தாரே, – அருள்
பெய்து நவமும் தவமுந் தந்தாரே, – உரை ………. சொல்
2.அச்சய சவுந்தர அசரீரி, – அதி
உச்சித சுதந்தர அருள்வாரி,
ஐயா வல்லாவே, மாதேவா, – ஓ!
துய்யா, நல்லாவே, ஏகோவா, – உரை ………. சொல்
3.பாவ வினை யாவையுந் தீர்த்தாரே, – உயர்
தேவ சபையில் எமைச் சேர்த்தாரே@
செல்லமாய் முகம் பார்த்தாரே, – பெரும்
செல்வம் போல் எமைச் சேர்த்தாரே, – உரை ………. சொல்