theeya manathai maarra vaarum தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே – கன
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கன
நேய மேவியே
1. மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்
பாவி நான்.
2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே, – மருள்
தீர்க்கும் தஞ்சமே
3. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே, அவர்
கிருபை தேடவே
4. தேவ வசனப் பாலின் மீது தேட்டம் தோன்றவே, – மிகு
தெளிவு வேண்டவே