udavi varum kanmalai nokki உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் (2)
1. கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார் (2)
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் (2) – உதவி
2. கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார் (2)
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் (2) – உதவி
3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார் (2)
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் (2) – உதவி
4. போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார் (2)
இப்போது எப்போது
என்னாளும் காக்கின்றார் (2) – உதவி