• waytochurch.com logo
Song # 26951

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே துதி


தண்ணீரை கடந்திடும் வேளையிலும் அவர்

நம்மோடு இருப்பேன் என்றார் (2)

அக்கினி சூளையில் நடந்திடும் வேளையில்

விக்கினம் சூழாதென்றார் -இன்ப
கஷ்டங்கள் நஷ்டங்கள் சூழ்ந்திடும் வேளையில்

சோர்ந்திடா பெலன் அளிப்பார்

நாளும் நம் குறைகள் யாவையும் கண்டு

நல்குவேன் கிருபை என்றார் - இன்ப
திகையாதே கலங்காதே என்றுரைத்தார் அவர்

திக்கற்றோராக விடார்

பயப்படாடதே சிறுமந்தை எற்றழைத்தார்

பாரில் நம் மேய்ப்பனவர் - இன்ப
சிங்கத்தின் குட்டிகள் தாழ்ச்சியடைந்தாலும்

பங்கம் வராது காப்பார்

நம்மையே மீட்க தம்மையே ஈந்து

தரணியில் மாண்டுயிர்த்தார் - இன்ப
சீயோனின் ராஜனாய் சீக்கிரம் வந்துமே

சீயோனில் சேர்த்திடுவார்

மன்னவன் இயேசுவை சந்திக்கும் அந்நாளில்

மகிமையின் சாயல் அணிவோம் - இன்ப

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com