• waytochurch.com logo
Song # 26974

வானில் காகளம் முழங்கிடவே வாஞ்சையோடு பறந்திடுவோம்


கன்மலை வெடிப்பினில் உத்தமியாய்

கறைகள் திறைகள் அகற்றிடுவோம்

கற்புள்ள கன்னியாய் விழிப்புடனே

அவர் வரும் வேளைக்காய் காத்திருப்போம் - ஆ ஆமென்
மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த

மகிபன் உரைத்த வாக்கின்படி

மாசற்ற மணவாட்டி சபையதனை

மகிமையில் சேர்க்கவே வந்திடுவார் - ஆ ஆமென்
பாரில் பலியாய் ஜீவன் வைத்தோர்

பாடுகள் பாதையில் ஏற்றதினால்

தியாகத்தின் மேன்மையைக் காத்துக் கொண்டோர்

அவர் போல் மாறியே பறந்திடுவார் - ஆ ஆமென்
மகிமையின் நாளும் நெருங்கிடுதே

மணவாளன் சத்தம் கேட்டிடுதே

மகிழ்ச்சியின் நிறைவை அனுபவிக்க

ஆயத்தம் தீவிரம் அடைந்திடுவோம் - ஆ ஆமென்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com