• waytochurch.com logo
Song # 26982

வல்ல தேவன் என்னோடிருப்பாரே வழுவாதென்னை காத்திடுவாரே


பயப்படாதே என்று உரைத்தாரே

பாரின் எந்தனை மீட்டெடுத்தாரே

பேரைச்சொல்லி அழைத்திட்டாரே

பேரானந்தம் நான் சொந்தமானேன் - வல்ல
தண்ணீர்களை கடந்திடும் போதும்

தயங்காதே உன்னோடு இருப்பேன்

அக்கினியில் நடக்கும் போதும்

அதுன் பேரில் பற்றாதே என்றார் - வல்ல
இமைப்பொழுது என்னை கைவிட்டாலும்

இரக்கங்களால் சேர்த்துக் கொள்வாரே

நித்திய கிருபையுடன் இரங்கி

நித்தம் என்னை நடத்துவாரே - வல்ல
உறுதியாய் உம்மைப் பற்றிக் கொண்டால்

உண்மையாய் என்னைக் காக்துக் கொள்வீரே

கெஞ்சும் வேண்டுதல்கள் கேட்பீரே

தஞ்சம் வேறொருவருமில்லை - வல்ல
அறிவாரே நான் போகும் வழியை

அறிந்தென்னை சோதித்திடுவாரே

புடமிட்டு சுத்தம் செய்வாரே

பின்பு சுத்த பொன்னாய் மாறுவேன் - வல்ல
வருவேன் என்ற வாக்குப்படியே

வருவீரே என் யேசு மணாளா

அசைவில்லா அந்நாட்டை சேர

ஆவலாக காத்திருப்பேனே - வல்ல

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com