• waytochurch.com logo
Song # 26993

ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் தம் மந்தை காத்தனர்


அவர்கள் அச்சங்கொள்ளவும்

விண் தூதன்; "திகில் ஏன்?

எல்லாருக்கும் சந்தோஷமாம்

நற்செய்தி கூறுவேன்
தாவீதின் வம்சம் ஊரிலும்

மெய் கிறிÞது நாதனார்

பூலோகத்தார்க்கு ரட்சகர்

இன்றைக்குப் பிறந்தார்
இதுங்கள் அடையாளமாம்

முன்னணை மீது நீர்

கந்தை பொதிந்த கோலமாய்

அப்பாலனைக் காண்பீர்"
என்றுரைத்தான்; அக்ஷணமே

விண்ணோரம் கூட்டத்தார்

அத்தூதனோடு தோன்றியே

கர்த்தாவைப் போற்றினார்
மா உன்னதத்தில் ஆண்டவா,

நீர் மேன்மை அடைவீர்

பூமியில் சமாதானமும்

நல்லோர்க்கும் ஈகுவீர்.

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com