• waytochurch.com logo
Song # 26997

யெகோவாயீரே யாவுமெனக்காய் முடித்தீரே லோக ஸ்தாபன முதலே


ஆபிரகாமுக்காய் தேவ பர்வதத்தில்

ஆயத்தமாக்கி நீர் வைத்ததோர் ஆட்டைப் போல்

தாயினிடத்தில் யான் சேயனாய்த் தோன்றுமுன்

தற்பரனே யாவும் கருதி வைத்தீர் - யெகோவா
கானகமதிலே என்னைப் பின் தொடர்ந்தே

ஞானகன்மலையாய் தாகங்கள் தீர்ப்பாரே

வான மன்னாவாய் உம் மாறிடா வார்த்தையால்

மாற்றுகிறீர் மண்ணின் சாயலென்னில் - யெகோவா
பாரிலென் கரங்கள் போரினில் ஜெயிக்க

நீரே உம் நித்திய புயத்தால் தாங்கியே

ஆனந்த தைலத்தால் உள்ளம் வழிய

அன்பரே நீர் அபிஷேகித்தீர் - யெகோவா
அன்பரே உம்மிலே அன்பு கூர்ந்தோருக்கு

ஆயத்தமாக்கிய ஆனந்த நம்மைகள்

கண்கள் கண்டதில்லை கேட்டறிந்ததில்லை

காணயான் ஆவியால் கருணை செய்தீர் - யெகோவா
அந்த நாள் வரையும் எந்தனை காப்பீர்

எந்தையே உமக்காய் சொந்தமாயளித்தேன்

சந்ததம் நிலைக்கும் சீயோன் பர்வதம் போல

என்றும் கிருபையினால் இருப்பேன் - யெகோவா

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com