• waytochurch.com logo
Song # 27017

மீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே மூன்றாணி மீதில் காயம் அடைந்தே


லோகப்பாவம் தீர்க்க பலியான

தேவ ஆட்டுக் குட்டியானவர்

சொந்தமான இரத்தம் சிந்தி மீட்டு

இவ்வளவாய் அன்பு கூர்ந்தவர்; எம்மில் - மீட்பர்
இயேசுவே கல்வாரி சிலுவையில்

ஏறி ஜீவன் தத்திராவிடில்

ஏழையான் என் பாவ பாரங்களை

எங்குச் சென்று தீர்த்துக் கொள்ளுவேன் - பூவில் - மீட்பர்
தேவனே என்னை ஏன் கை விட்டீரோ

என்று இயேசு கதறினாரே

பாவத்தால் பிதாவின் முகத்தையும்

பார்க்கவும் முடியவில்லையோ - அவர் - மீட்பர்
அன்னை தந்தை யாவரிலும் மேலாய்

அன்பு கூர்ந்தார் அண்ணல் இயேசுவே

ஆச்சரிய தேவ அன்பைப்பாட

ஆயிரம் நாவுகள் போதுமோ - பதி - மீட்பர்
பாவ பாரம் லோகக் கவலைகள்

தாவி உன்னைச் சூழ்ந்த போதிலும்

தேடி; நாடி ஓடி வந்தால் உன்னைத்

தேற்றி, ஆற்றித் தாங்குவார் அவர் - இப்போ - மீட்பர்
கோரமாம் சிலுவைக் காட்சி கண்டால்

கல் மனமும் உருகிடுமே

மாயலோக ஆசை வஞ்சிக்குமே

மாறிடாத இயேசு போதுமே - என்றும் - மீட்பர்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com