• waytochurch.com logo
Song # 27041

புத்தம் புதிய பாடல் தந்தார் நித்தம் அவரைத் துதித்திடவே


காலையில் கூவிடும் பறவைகளும்

மாலையில் கூப்பிடும் விலங்குகளும்

இன்பமாய் இயேசுவைத் துதிக்கின்றன

என்னையும் துதித்திட அழைக்கின்றன - புத்தம்
மரங்களில் மோதிடும் தென்றல் காற்றும்

பாறையில் மோதிடும் கடலலையும்

துள்ளியே களிப்புடன் துதிக்கின்றன

என்னையும் துதித்திட அழைக்கின்றன - புத்தம்
காகங்கள் கரைந்திடும் குரலைக் கேட்டு

படைத்தவர் மகிழ்ந்திடும் வேளையிலே

பாவி என் பாடலின் துதிகேட்டு

என் தேவன் களித்திட மகிழுவேன் நான் - புத்தம்
உள்ளத்தில் பாவங்கள் இருக்கும் வரை

உண்மையாய் துதித்திட முடியவில்லை

கல்வாரி இரத்தத்தால் கழுவப் பெற்றேன்

இன்பமாய் இயேசுவைத் துதித்து வாழ்வேன் - புத்தம்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com