• waytochurch.com logo
Song # 27043

பிராண நாதன் என்னில் வைத்ததாம் அன்பினை தியானிக்கும் போதெல்லாம் கண்ணீர்


தாயின் வயிற்றினில் பிரித்த தாம் நாள் முதல்

பற்பல பாதையில் பரிவுடன் காத்தீரே

வஞ்சக சாத்தானின் சூழ்ச்சியினின்றுமே

பறித்திழுத்தெந்தனை உம் சொந்தமாக்கினீர் - என்
குயவனின் கையில் களிமண்ணைப் போலவே

என்னை உம் கையிலே வைத்திட்டேன் நாயகா

என் சொந்த இஷ்டமோ ஏதும் வேண்டாம் நாதா

உம் நோக்கம் என்னில் பூரணமாகட்டும் - என்
நேசர் கரத்தினில் தீமை ஏதுமுண்டோ

யாதும் என் நன்மைக்கே என்பதை அறிகுவேன்

ஜுவாலிக்கும் அக்கினியோ பெருக்கான வெள்ளமோ

பட்சிக்க வொட்டீர் அமிழ்த்தவும் பார்த்திடீர் - என்
என்னையும் எந்தனுக்குள்ளதாம் யாவையும்

நேசர் கரத்தில் முற்றுமாய் வைத்திட்டேன்

ஜீவனோ மரணமோ பிராண நாதன் என்னில்

வாஞ்சிப்பதெதுவோ சம்பூரணமாகட்டும் - என்
மரண இருள் பள்ளம் தாண்டிடும் நேரத்தில்

இயேசு என் நேசரின் கரமதைக் காண்பதால்

மகிழ்வுடன் ஏகுவேன் அக்கரை யோர்தானில்

நித்தியம் நித்தியம் ஆனந்தம் கொள்ளுவேன் - என்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com