• waytochurch.com logo
Song # 27048

பாவிக்குப் புகலிடம் இயேசு இரட்சகர் பாரினில் பலியாக மாண்டாரே


காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்

காசுக்காகவே கர்த்தன் இயேசுவை

கொலை செய்யவே கொண்டு போனாரே

கொல்கதா மலைக்கு இயேசுவை - பாவி
கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்

குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்

பரிகாசமும் பசி தாகமும்

படுங்காயமும் அடைந்தாரே - பாவி
கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட

கிரீடம் முள்களில் பின்னி சூடிட

இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்

இதைக் காணும் உள்ளம் தாங்குமோ - பாவி
உலகத்தின் இரட்சகர் இயேசுவே

உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்

தம்மை நம்பினால் உன்னைக்கைவிடார்

தளராமல் நம்பி ஓடிவா - பாவி
பாவ சாபங்கள் தீரா வியாதிகள்

பல தோல்விகள் உந்தன் வாழ்க்கையில்

கண்டு நீ மனம் கலங்குவதேன்

கர்த்தர் இயேசுவண்டை ஓடிவா - பாவி
வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே

வாருங்கள் என்னண்டையில் என்கிறார்

இளைப்பாறுதல் தரும் இயேசுவே

இன்று தேடி நாடி நம்பி வா - பாவி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com