• waytochurch.com logo
Song # 27052

பாரீர் கெத்சமெனே பூங்காவில் என் நேசரையே பாவி எனக்காய் வேண்டுதல் செய்தி


தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்

தேவாதி தேவன் ஏக சுதன் படும்பாடுகள் எனக்காய் - பாரீர்
அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்

எப்படியும் உம் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் - பாரீர்

என்றாரே
இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே

இம்மானுவேலன் உள்ளம் உருகியே வேண்டுதல் செய்தனரே - பாரீர்
மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்

முன்னவர் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே - பாரீர்
அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்

துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகிறார் - பாரீர்
என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை

எண்ணியெண்ணியே உள்ளங் கனிந்து நான் என்றும்

புகழ்ந்திடுவேன் - பாரீர்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com