• waytochurch.com logo
Song # 27133

தேவ தேவன் பாலகனாய் தேவலோகம் துறந்தவராய்


பரம சேனை இரவில் தோன்றி

பாரில் பாடி மகிழ்ந்திடவே

ஆநிரையின் குடில் சிறக்க

ஆதவனாய் உதித்தனரே - அல்லேலூயா
ஆயர் மனது அதிசயிக்க

பேயின் உள்ளம் நடுநடுங்க

தாயினும் மேல் அன்புள்ளவராய்

தயாபரன் தான் அவதரித்தார் - அல்லேலூயா
லோகப் பாவம் சுமப்பதற்கோ

தாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றே

வேதம் நிறை வேற்றுதற்கோ

ஆதியாக அவதரித்தார் - அல்லேலூயா
தாரகையாய் விளங்கிடவோ

பாரில் என்னை நடத்திடவோ

ஆருமில்லா என்னைத் தேடி

அண்ணலே நீர் ஆதரித்தீர் - அல்லேலூயா

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com