• waytochurch.com logo
Song # 27153

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயாதி தூயனை துதித்திடுவேன்


பரிசுத்த ஜீவியம் தாருமையா

பரிசுத்த சாயலில் நான் வளர

கழுகினைப் போல புது பெலன் அடைந்து

கர்த்தா உம் கிருபையால் நான் நிலைக்க - என்
ஆவியின் வரங்கள் தாருமையா

ஆவியில் அனலாய் நான் நிலைக்க

ஆவியின் கண்கள் அளித்திடுவீர்

அனுதினம் சாட்சியாய் நான் உழைக்க - என்
இயேசுவே உம் சாயல் அணிந்திடவே

இயேசுவே தினம் தினம் உதவி செய்வீர்

பூரணர் வெளிப்படும் நாள் தனிலே

பூரண சாயலில் நிலை நிற்கவே - என்
நாசமோ மோசமோ பட்டயமோ

பாசமாய் உமக் கென்று வாழ்ந்திடவே

இரத்த சாட்சியாய் மரித்தாலும்

இரட்சிப்பின் தேவனில் களி கூர்ந்திட - என்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com