• waytochurch.com logo
Song # 27171

தாகம் தீர்க்கும் ஜீவ நதி தரணியில் உண்டோ எனத் தேடினேன்


அருவியின் நீரை பருகிவிட்டேன்

ஆற்றினில் ஊற்றை அருந்திவிட்டேன்

துரவுகள் கடலும் தாகம் தீர்க்கவில்லை

தூரத்தைக் கானலாய் ஆகியதே -தாகம்
கானகம் சோலையும் தேடியபின்

வானகம் நோக்கியே அபயமிட்டேன்

கன்மலை ஒன்று தோன்றக் கண்டேன் -தாகம்
பருகியே வாழ்த்தினேன் தாகமில்லை

அருகினில் சென்றேன் கன்மலையுமில்லை

காயங்கள் தன்னில் செந்நீர் சுரக்க

கன்மலையாம் என் இயேசு நின்றார் -தாகம்
ஐயனின் திருவடி வீழ்ந்தேன் நான்

ஆன்மாவின் தாகம் தீர்ந்ததென்றும்

புன்னகை பூத்து புனிதனும் மறைய

புதுபெலன் அடைந்தேன் என் உள்ளத்திலே -தாகம்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com