• waytochurch.com logo
Song # 27181

ஜீவனுள்ள தேவனை சேவிப்பார் யாருண்டோ ஜீவனை அவர்க்காயளிக்க இங்கு யாருண்டோ


மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு?

ஜீவாதிபதி இயேசு தம் ஜீவன் கொடுத்ததால்!

திருச்சபையின் வளர்ச்சி ஓங்கச் செய்ததெவ்வாறு

பரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டால் -நம்மிலே
சாத்தராக், மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு?

இராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு

ஜீவனை பணயம் வைத்து தீக்குள் சென்றதால்!

சிலையை வணங்கத் தயக்கமின்றி மறுத்து நின்றதால் -நம்மிலே
பரலோகத்தின் பாக்கியத்தைப் பெறுவோர் யாவரும்

உபத்திரவத்தின் குகைக்குள் நுழைந்து சென்று திரும்பணும்

உலகத்தையும், மேன்மையையும் உதறி தள்ளணும்

சிலுவையை மட்டும் எடுத்துச் சுகித்திருக்கணும் - நம்மிலே
வெள்ளை அங்கி தரித்து நிற்கும் கூட்டம் யார் இவர்?

இரத்தத்தில் தம் அங்கிகளை வெளுத்து தோய்த்தவர்

ஜீவனை வெறுத்து சிலுவையை எடுத்து

வெற்றிக் கீதம் பாடும் கூட்டம் உலகில் உதிக்கட்டும் - நம்மிலே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com