• waytochurch.com logo
Song # 27214

கோடா கோடி þதோத்திரம் பாடி கிறிþதுவின் அன்பை ருசிப்போமே


பாவியை மீட்க பரன் சித்தங்கொண்டார்

பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார்

பரமனின் வேளையைத் தேடி வந்தாரே

பாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ பூவுலகில் - கோடா
தேவனின் சித்தம் செய்யும்படியாய்

தாசனின் கோலம் தாகமெடுத்தணிந்து

தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும்

தம்மை பலியாய் தத்தம் செய்தாரே எந்தனுக்காய் - கோடா
ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து

கேடு வராது காக்கும் நல் மேய்ப்பன்

இன்றுமென் மேலே வைத்த நேசத்தால்

என்றென்றும் நன்றி கூறித் துதிப்பேன் இறையவனை- கோடா
தாவீது கோத்திரச் சிங்கமாய் வந்தும்

சாந்தத்தால் என்னைக் கவர்ந்து கொண்டாரே

தாழ்மையான ஆட்டுக் குட்டியுடனே

தங்கியிருப்பேன் சீயோன் மலையில் நித்தியமாய் - கோடா
குயவனின் கையில் களிமண்ணைப் போல

குருவே நீர் என்னை உருவாக்குமையா

மாசற்ற மணவாட்டியாய் என்னைக்

காத்துக்கொள்ளும்படி கருணை கூர் ஐயா ஏழை என்னை - கோடா

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com