• waytochurch.com logo
Song # 27231

காணாத ஆட்டின் பின்னே கர்த்தர் கண்ணீருடன் அலைந்தார்


முள்ளும் புதரும் காடும் மலையும்

உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார்

சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்

சாத்தான் வலையில் நீ சிறையாகினாய் - காணாத
சுத்த இதயம் வேண்டாம் என்றெண்ணி

கர்த்தரின் அன்பை நீ சந்தேகிர்தாய்

யோனாவைப் போல நீ போனாயல்லோ

ஏசுபரன் வாக்கு வெறுத்தாயல்லோ - காணாத
என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும்

இயேசுவின் பாதை நீ விட்டோடாதே

நீதி நிறைந்த தம் கரங்களை

நீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார் - காணாத
துன்மார்க்கரெல்லாம் சன்மார்க்கரோடே

தேவ கோபாக்கினையால் மாள்வாரே

கர்த்தரின் பந்தியில் பங்கடைய

கண்ணீருடன் நீயோ அருள் வேண்டுவாய் - காணாத
எத்தனை நேரம் உன்னை அழைந்தார்

இத்தனை காலம் நீ தள்ளலாமோ

கர்த்தரின் சித்தம் உன் வேளையிதே

கண்டு உணர்ந்து விரைந்தே நீ வா - காணாத

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com