• waytochurch.com logo
Song # 27237

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை கண்கள் கலங்கிடுதே


கெத்சமனே பூங்காவினில்

கதறி அழும் ஓசை

எத்திசையும் தொனிக்கின்றதே

எங்கள் மனம் திகைக்கின்றதே

கண்கள் கலங்கிடுதே - கல்வாரி
சிலுவையில் மாட்டி வதைத்தனரோ

உம்மை செந்நிறம் ஆக்கினரோ

அப்போதும் அவர்க்காய் வேண்டினீரோ

அன்போடு அவர்களை கண்டீரன்றோ

அப்பா உன் மனம் பெரிதே - கல்வாரி
எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே

உம் ஜீவன் தந்தீரன்றோ

எங்களை தரை மட்டும் தாழ்த்துகிறோம்

தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே

ஏற்று என்றும் நடத்தும் - கல்வாரி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com