• waytochurch.com logo
Song # 27252

கர்த்தரின் பல நன்மைகளை எண்ணி கருத்துடனே துதித்திடுவேன்


நடந்து வந்த வழிகளெல்லாம்

நல்லவரின் கரம் சுமந்ததுவே

ஆறுதல் ஆதரவும் அளித்தாரே

ஆபத்திலே உற்ற துணையவரே
வஞ்சகன் வீசின வலைகளிலே

சிக்கிடாமலே பாதுகாத்தனரே

தாயினும் மேலாக நேசித்தாரே

தாரணியில் என் தஞ்சமும் அவரே
ஜெயமான பாதைகளில் செல்ல

சேனை வீரராய் முன் செல்லுவாரே

கண்ணை என் மீது வைத்திடுவாரே

கற்பிப்பாரே தேவ ஆலோசனைகள்
தூயவரின் அன்பினிலே நாளும் வளர

தூய ஜீவியத்திலும் முன்னேற

தருவாரே தினமும் கிருபைகள்

தயங்காது பாடு சகித்திடவே
மரண இருளில் நடந்தாலும்

பரமன் என்னோடே இருப்பாரே

பரத்திலே உண்டு பல வீடே

சிகரத்தில் நிற்பேன் அவரோடே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com