• waytochurch.com logo
Song # 27268

கர்த்தர் துயர் தொனியாய் கதறி முகங் கவிழ்ந்தே


மரணத்தின் வியாகுலமோ

மனிதர் துணை இல்லையோ

தேவ தூதன் தேற்றிடவே

தருணம் நெருங்க ஒப்படைத்தார்

துன்ப சுமை சுமந்தார் - கர்த்தர்
துக்கத்தால் தம் சீஷர்களே

தலை சாய்ந்து தூங்கினாரே

தம்மை மூவர் கைவிடவே

தூரமாய் கடந்தே திகிலடைந்தார்

தன்னந் தனிமையிலே - கர்த்தர்
பிதாவே இப்பாத்திரத்தின்

பங்கினை நான் ஏற்றுக் கொண்டேன்

ஆகட்டும் உமது சித்தம்

அது நீங்கிடுமோ என்றுரைத்தார்

ஆ! இரத்த வேர்வையுடன் - கர்த்தர்
திறந்த கெத்சமனேயில்

துணிந்து வந்த பகைஞன்

என்ன துரோகம் செய்திடினும்

எந்தன் சினேகிதனே என்றழைத்தார்

என்ன மா அன்பிதுவே - கர்த்தர்
பரமன் ஜெப சத்தமே

பூங்காவினில் கேட்கிறதே

பெருமூச்சுடன் ஜெபிக்கும்

அவரோடிணைந்தே கண்ணீருடன்

ஆவியிலே ஜெபிப்பேன் - கர்த்தர்
இயேசு தாங்கின துன்பங்கள்

என்னைத் தாண்டியே செல்லாதே

எனக்கும் அதில் பங்குண்டே

சிலுவை மரணப் பாடுகளால்

சீயோனில் சேர்ந்திடுவேன் - கர்த்தர்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com