• waytochurch.com logo
Song # 27272

கர்த்தர் உன் வீட்டைக் கட்டாராகில் அதை கட்டும் உந்தன் பாடு விருதா


உன் வழிகளிளெல்லாம்

உன்னை தூதர்கள் காத்திடுவார்

உன் பாதம் கல்லில் இடறாதபடி

தங்கள் கரங்களில் ஏந்திடுவார் - ஆதலால்
இரவின் பயங்கரத்துக்கும்

பகலில் பறக்கும் அம்புக்கும்

இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்

நீ பயப்படவே மாட்டாய் - ஆதலால்
சிங்கத்தின் மேலும் நடந்து

வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்

அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்

உன்னை விடுவித்துக் காத்திடுவார் - ஆதலால்
ஆபத்திலும் அவரை நான்

நோக்கி கூப்பிடும் வேளையிலும்

என்னை தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே

என் ஆத்தும நேசரவர் - ஆதலால்
கர்த்தருக்கு பயப்பட்டவன்

இவ்வித ஆசீர்வாதம் பெறுவான்

கர்த்தர் சீயோனில் இருந்து உன்னை

கடைசி மட்டும் ஆசீர்வதிப்பார் - ஆதலால்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com