• waytochurch.com logo
Song # 27279

கதிரவன் தோன்றும் காலையிதே புதிய கிருபை பொழிந்திடுதே நல்


வான சுடர்கள் கானக ஜீவன்

வாழ்த்திடவே பரன் மாட்சிமையே

காற்று, பறவை, ஊற்றுநீரோடை

கர்த்தருக்கே கவி பாடிடுதே - கதிரவன்
காட்டில் கதறி கானக ஓடை

கண்டடையும் வெளி மான்களைப் போல்

தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்

தற்பரன் இயேசுவைத் தேடிடுவோம் - கதிரவன்
கர்த்தர் கிருபை என்றென்றும் ஓங்க

கர்த்தரே நல்லவர் என்றுரைப்போம்

கேருபீன்கள் மத்தியில் வாழும்

கர்த்தர் இக்காலையில் எழுந்தருள்வார் - கதிரவன்
எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்

என் கரங்கள் குவிந்தே வணங்கும்

பாக்கியம் நான் கண்டடைந்தேனே

யாக்கோபின் தேவனே என் துணையே - கதிரவன்
காலை விழிப்பே கர்த்தரின் சாயல்

கண்களும் செவியும் காத்திருக்கும்

பாதம் அமர்ந்து வேதமே ருசித்து

கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன் - கதிரவன்
வானம் பூமி யாவும் படைத்தீர்

வானம் திறந்தே தோன்றிடுவீர்

ஆவல் அடங்க என்னையும் அழைக்க

ஆத்தும நேசரே வந்திடுவீர் - கதிரவன்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com