• waytochurch.com logo
Song # 27288

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் ஏசு குருசை சுமந்தே


கன்னத்தில் அவன் ஓங்கி அறைய

சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்

அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி

ஆண்டவரை அனுப்புகின்றார் - ஏறு
மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே

நெஞ்சை பிளந்தான்! ஆ கொடுமை

இரத்தமும் நீரும் ஓடி வருதே

இரட்சகரை நோக்கியே பார் - ஏறு
இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்

சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார்

நேசிக்கின்றாயோ ஏசு நாதரை

நேசித்து வா குருசெடுத்தே - ஏறு
சேவல் கூவிடும் மூன்று வேளையும்

சொந்த குருவை மறுதலித்தான்

ஓடி ஒளியும் பேதுருவையும்

தேடி அன்பாய் நோக்குகின்றார் - ஏறு
பின்னே நடந்த அன்பின் சீஷன் போல்

பின்பற்றி வா சிலுவை வரை

காடியைப் போல கசந்திருக்கும்

கஷ்டங்களை அவரிடம் சொல் - ஏறு
செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும்

சொந்த தாயின் அன்பதுவே

எருசலமே! எருசலமே!

என்றழுதார் கண்கலங்க - ஏறு

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com