• waytochurch.com logo
Song # 27297

என்னையும் உமக்கு நான் தந்தேனே ஏசு நாதா என் கரம் பிடித்தென்றும் நடத்திட


பாதையில் பாடுகள் பலுகியே வந்தாலும்

வாதை பிணியும் என்னை வருத்தினாலும்

வல்லமை குன்றிடாமல் வந்தென் மேல் அமர்ந்துமே

வழுவாமல் அனுதினம் நடத்திடும் பரமேசா - என்னையும்
கொந்தளிப்பால் அலைமோதிடும் படகுபோல்

எந்தன் ஜீவிய யாத்திரை கடந்தாமே

சோதனை வெள்ளம் போல புரண்டென்மேல் வந்தாலும்

சோர்ந்திடா தயையுடன் நடத்திடும் பரமேசா - என்னையும்
அக்கினி ஊடாக நடந்து நான் சென்றாலும்

அக்கினி பற்றிடாதென்றுரை செய்தீரே

தண்ணீரைக் கடந்து நான் நடந்திடும் வேளையும்

தவறாமல் துணை நின்ற நடத்திடும் பரமேசா - என்னையும்
ஏழை என் வாலிபத்தின் அதிபதி நீரல்லே

என் மணவாளனும் நீர் தானல்லோ

ஜீவனுள்ள நாளெல்லாம் நீர் போதும் இயேசுவே

ஜீவனும் போகும் வரை நடத்திடும் பரமேசா - என்னையும்
இத்தரை யாத்திரை விரைந்தோடி முடிந்தபின்

அக்கரை நாட்டினைச் சுதந்தரிப்பேன்

இயேசுவே கண்ணீர் யாவும் துடைத்தென்னைத் தேற்றுமே

என்றுமாய் ஜெயக்கீதம் பாடுவேன் பரமேசா - என்னையும்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com