• waytochurch.com logo
Song # 27326

என் ஆத்துமாவே கலங்கிடாதே உன்னத தேவன் உன் அடைக்கலமே


பஞ்சம் பசியோ நிர்வாணமோ

மிஞ்சும் வறுமையோ வந்திடினும்

கொஞ்சம் அஞ்சாதே

தஞ்சம் தந்து உனைத் தாங்கிடுவார் - என்
உற்றார் உறவினர் மற்றும் பலர்

குற்றமே கூறித் திரிந்திடினும்

கொற்றவன் இயேசுன்னை

பெற்ற பிதாவைப் போல் அரவணைப்பார் - என்
நெஞ்சில் விசாரங்கள் பெருகுகையில்

அஞ்சாதே என்றவர் வசனம் தேற்றும்

வஞ்சகன் எய்திடும்

நஞ்சாம் கணைகளைத் தகர்த்திடுவார் - என்
வாழ்க்கைப் படகினில் அலை மோதி

ஆழ்த்துகையில் உன் அருகில் நிற்பார்

சூழ்ந்திடும் புயல் நீக்கி

வாழ்ந்திடவே வலக்கரம் பிடிப்பார் - என்
மரணமே வந்தாலும் மருளாதே

சரணடைந்தால் தைரியம் தந்திடுவார்

அரனவர் ஆபத்தில்

திரணமாய் மதிப்பாய் உன் ஜீவனையே - என்
துன்ப பாதை செல்ல துணிந்திடுவாய்

அன்பர் சென்ற பாதை அதுவேதான்

துன்பமே உன் பங்கு

துன்ப மூலம் தேவ ராஜ்யம் சேர்வாய் - என்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com